தேர்தல் பொறுப்பாளர்களாக மேலும் 5 பேர் நியமனம்

தேர்தல் பொறுப்பாளர்களாக மேலும் 5 பேர் நியமனம்

செல்வப்பெருந்தகை

விளவங்கோட்டில் மேலும் 5 பேர் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம். மாந்திரத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்., கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக கூடுதலாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி காங் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களாக காங் சேவாதள மேல் புறம் மேற்கு வட்டார தலைவர் ஷாஜி, மேல்புறம் மேற்கு வட்டார முன்னாள் முன்னாள் தலைவர் சதீஷ், கிள்ளியூர் வட்டார முன்னாள் தலைவர் எபனேசர், காங்,மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், சாமுவேல் ஜார்ஜ் ஆகிய 5 பேரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story