ஈரோடு மாநகராட்சிக்கு பொது சுகாதார மேலாளர் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சிக்கு பொது சுகாதார மேலாளர் நியமனம்: விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சிக்கு பொது சுகாதார மேலாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள பொது சுகாதார மேலாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் , மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்படு, இதற்காப Msc (Zoology with Entomology as one of the subject ) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். ஏக்காரணம் கொண்டும் பணிவரன்முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை ஜனவரி-19 ந் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுககொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story