குடியாத்தம் அரசினர் கல்லூரியில் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை

குடியாத்தம் அரசினர் கல்லூரியில் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை

மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் 

வேலூர் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பேராசிரியர் தேவிபிரியா, ஆங்கிலத்துறை தலைவர் வாசுகி, கணிதத் துறை தலைவர் கருணாநிதி, இயற்பியல் துறை தலைவர் தாமரை, வேதியியல் துறை தலைவர் தமீமுன் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் தலைமை தாங்கி 15 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், கல்லூரியின் பல்வேறு அறக்கட்டளையின் நிதியிலிருந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினார்.

Tags

Next Story