கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா !

கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா !

 பாராட்டு விழா

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளி மாணவர்கள் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா சாம்பியன்ஷிப் 2024 போட்டி கடலுாரில் நடந்தது. இதில் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின்கீழ் வெற்றி பெற்றனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஜேஷ் ஷர்மா வரவேற்றார். செயலாளர் செந்தில், தாளாளர் அஸ்வின் பாலாஜி வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story