திருக்கோவிலூர் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

திருக்கோவிலூர் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ஆசிரியர்களுக்கு பாராட்டு
திருக்கோவிலூர் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

திருக்கோவிலுார் சாரதா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சிக்குபாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சியில்,பள்ளியின் நிறுவனர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பள்ளி முதல்வர் கீதா வரவேற்றார். பள்ளியின் தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். நிர்வாகி கார்த்திகேயன் தலைமை தாங்கி வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story