ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு பாராட்டு விழா
பாராட்டு விழா 
தென்காசி மாவட்ட கருவூலத்தில் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவருக்கு பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட கருவூலத்தில் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் வீரவநல்லூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் இவர் நேற்று ஓய்வு பெற்ற அவரது சேவையை பாராட்டி பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் பாராட்டு விழாவை தென்காசி அரசு அலுவர் ஒன்றிய கூட்டரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவிற்கு கருவூல அலுவலர் ஆரோக்யராஜ் தலைமை வகித்து சிவசுப்பிரமணியனை பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story