பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

இராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி இந்த ஆண்டில் பணி ஓய்வு பெறும் நல்லாசிரியர் சீ. லோகநாதன் மற்றும் சு. திருமறைமணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியில் ஓய்வு பெறும் இரண்டு ஆசிரியர்களுக்கும் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசு வழங்கியும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திருமதி. கவிதா மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. முத்துச்செல்வன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. கீதா, பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் திரு.குமார், கல்வி ஆர்வலர் திரு.பெருமாள், தன்னார்வலர் திருமதி. பேபி, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் திருமதி.திவ்யபாரதி, மற்றும் மேகலா ஆகியோர் கலந்துகொண்டு பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டிப் பேசினர். முடிவில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.

Tags

Next Story