மாநில அளவில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவில் நாதஸ்வர போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சார்பாக மாநில அரசு நடத்தும் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு மாநில அளவில் நாதஸ்வர வாசிப்பில் இரண்டாம் பரிசை வென்ற மாணவி ஜெயமித்ராவிற்கும் அவருக்கு பயிற்சி அளித்த அவரது பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்து ஊக்க பரிசு வழங்கினர். மேலும் தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள் அனைத்து விதமான போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் பரிசை பெற வேண்டும் என ஊக்குவித்தார். இதனை தொடர்ந்து பள்ளி மேடையில் நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டி அசத்திய பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

Tags

Next Story