கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா !

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா !

கால்பந்து போட்டி

சின்னசேலத்தில் நடந்த தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் சின்னசேலம், அணிவெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

சின்னசேலத்தில் நடந்த தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் சின்னசேலம், அணிவெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. சின்னசேலம் நண்பர்கள் கால்பந்தாட்ட குழுவுடன் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில் 29வது தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டிகள் நடந்தது.

சின்னசேலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண், பெண் இருபாலருக்கான போட்டிகள் பகல், இரவு ஆட்டமாக மின்னொலியுடன் நடந்தது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சின்னசேலம் அணி முதலிடம் பிடித்தது. சென்னை அணி இரண்டாமிடமும், சேலம் அணி மூன்றாமிடமும் பிடித்தது. பெண்கள் பிரிவில் சென்னை அணி முதலிடமும், சின்னசேலம் அணி இரண்டாமிடமும், மன்னார்குடி அணி மூன்றாமிடமும் பிடித்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மகாபாரதி கல்வி நிலையங்களின் தாளாளர் மோகன், சின்னசேலம் கால்பந்தாட்ட குழு நிர்வாகி மணிவண்ணன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். நிர்வாகி முகமது ரபீக் வாழ்த்திப் பேசினார். அன்பு தமிழன் நன்றி கூறினார்.

Tags

Next Story