துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!

துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!

துளிர் திறனறிவுத் தேர்வு

துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!
கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளர் அ. ரகமத்துல்லா துளிர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து துளிர் தேர்வில் பங்கேற்க வேண்டும்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதந்தோறும் வெளிவரக்கூடிய துளிர் இதழை வாசிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடப் புத்தகங்களை தாண்டி பொது அறிவு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும் என பேசினார். ஆசிரியை லீயோ மங்கையர்கரசி நன்றி கூறினார்.

Tags

Next Story