மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் பாராட்டு !

மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் பாராட்டு !

பாராட்டு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக டாக்டர் தனபால் பணிபுரிந்து வருகிறார். இவர், இந்த மாதம் இறுதியில் பணி ஓய்வு பெறுவதையொட்டி அவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாகவும், அவரை கவுரவிக்கும் வகையிலும் சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பாளராக டாக்டர் தனபால் பணிபுரிந்து வருகிறார். இவர், இந்த மாதம் இறுதியில் பணி ஓய்வு பெறுவதையொட்டி அவரது மருத்துவ சேவையை பாராட்டும் விதமாகவும், அவரை கவுரவிக்கும் வகையிலும் சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராஜன், பொருளாளர் கந்தசாமி, துணைத்தலைவர் வடிவேல், பகுதி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் டாக்டர் தனபாலுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகளை வழங்கியும் பாராட்டு தெரிவித்தனர்.

இதேபோல், மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும் அரசு ஆஸ்பத்திரி டீன் மணியை சங்க நிர்வாகிகள் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story