குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு!

குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு!

பாராட்டு  நிகழ்ச்சி 

தேசிய மற்றும் மாநிலப் போட்டிகளில் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு.
தேசிய மற்றும் மாநிலப் போட்டிகளில் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி எஸ்விஎஸ் ஷோரூமில் நடைபெற்றது. கேலோ இந்தியா தேசிய அளவிலான போட்டியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை ஜீவா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்று, தேசியப் போட்டிக்குத் தேர்வானார். இதே மாநில அளவிலான போட்டியில் 61 முதல் 64 கிலோ எடைப் பிரிவில் சூரியபிரபா வெள்ளிப் பதக்கத்தையும், 58 முதல் 61 ஆண்கள் எடைப் பிரிவில் தரணிதரன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இம்மூவருக்கும் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். அப்போது, சங்கத்தின் துணைத்தலைவர் கண மோகன்ராஜ், தலைவர் கண மோகன்ராஜ், செயலர் சேது கார்த்திகேயன் மற்றும் கேலோ இந்தியா பயிற்சியாளர் காவியா,குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் காதர், பார்த்திபன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story