அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ / மாணவிகளுக்கு உதவிடும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சூலக்கரை, விருதுநகர்-3 ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் செயல்படுகின்றன. எட்டாம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- யை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள்.07.06.2024. பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

இது தொடர்பாக, மேலும் விவரங்கள் பெற்றிட, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் -04562- 252655- 294382 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருப்புக்கோட்டை -04566-225800 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர்-04562-290953 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சுழி-95788-55154, 70100 -40810 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் -04562-294755 ஆகிய தொலைபேசி எண்களில்; தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story