அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா


அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.


அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அக்பர், பொருளாளர் பன்னாலால் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் மொபின்கான் வரவேற்றார்.

பேரூராட்சி சேர்மன் அன்பு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் குமார், காமராஜ், சரவணன், அகமது ஷெரிப், அனிதா மோகன், மாணிக்கவாசகம், மேலாண்மைக் குழு தலைவர் செல்வி உள்ளிட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி துணைச் சேர்மன் கதிஜா பிவி நன்றி கூறினார்.

Tags

Next Story