அரக்கோணம்: 800 kg ரேஷன் அரிசி பறிமுதல்!

அரக்கோணம்: 800 kg ரேஷன் அரிசி பறிமுதல்!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரயில்வே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து கடப்பா வரை செல்லும் ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் மெமு ரயில்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் பெட்டியின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைத்திருந்த 36 மூட்டைகளில் சுமார் 800 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து பறக்கும்படை தாசில்தார் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story