அரக்கோணம் உடைந்த நிலையில் கிடந்த உண்டியல்: போலீசார் விசாரணை

அரக்கோணம் உடைந்த நிலையில் கிடந்த  உண்டியல்: போலீசார் விசாரணை

உடைந்து கிடந்த உண்டியல்

அரக்கோணம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் உடைந்த நிலையில் கிடந்த உண்டியலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கல்லாறு மேம்பாலத்தின் கீழ் கடந்த 2 நாட்களாக ஒரு சில்வர் உண்டியல் உடைந்த நிலையில் கிடந்தது. அந்த உண்டியலில் சிலுவை பொறிக்கப்பட்டு இருந்தது.

எனவே மர்ம நபர்கள் ஏதாவது தேவாலயத்தில் இருந்து திருடி வந்து இங்கு வைத்து உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து உண்டியல் திருடு போனது குறித்து புகார் ஏதும் போலீசாருக்கு வராத நிலையில் அதனை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story