அரக்கோணம்: ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

அரக்கோணம்:  ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு

பைல் படம் 

ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு பகுதியை சேர்ந்தவர் சவுமியா (27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் புறநகர் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து வந்துள்ளார். ரயில் மணவூர் ரெயில் நிலையத்திற்கு வந்த போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சவுமியாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார்.

இதுகுறித்து சவுமியா அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து செல்லும் புறநகர் ரயில்களில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் இதனை தடுக்க ரயில்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story