ஆரணி : பாஜக பேனர் சாய்ந்து விபத்து ஏற்படும் சூழல்

ஆரணி : பாஜக பேனர் சாய்ந்து விபத்து ஏற்படும் சூழல்

சாய்ந்த பேனர் 

ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பாஜவினர் வைத்துள்ள பேனர் சாய்ந்து விபத்து அபாயம் ஏற்பட்டது. காவல்துறையினர் பேனர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே, மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பாஜவினர் வைத்துள்ள பேனர் சாய்ந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவியது நல்வாய்ப்பாக எவருக்கும் பாதிப்பில்லை. காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து பேனர்களை அகற்றி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story