ஜவ்வாது மலையில் தொல்பொருள் துறையினர் ஆய்வு

ஜவ்வாது மலையில் தொல்பொருள் துறையினர் ஆய்வு

ஜவ்வாது மலையில் ஆய்வு

ஜவ்வாது மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மக்கள் வசித்து வருகின்றனர்.ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஜவ்வாது மலையில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags

Next Story