மதுவால் கணவன் மனைவிக்கிடையே தகராறு - விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை !!

மதுவால் கணவன் மனைவிக்கிடையே தகராறு -  விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை !!

காவல்துறை

மதுவால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்ப்பட்டதில் விரக்தியில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுவால் கணவன் மனைவிக்கிடையே தகராறு- விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன். கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, நத்தமேடு, ஆத்தூர், சரவணநகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சுபாஷ் வயது 24.இவரது மனைவி மதுமிதா வயது 24. சுபாஷுக்கு அண்மை காலமாக மதுப்பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது.

இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி இது தொடர்பாக பிரச்சனை எழுந்து வந்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 5 3/4- மணியளவில், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சுபாஷ்.

இதனால் மதுமிதாவுக்கும் சுபாஷுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சுபாஷ், அருகில் உள்ள பவித்திரம் பகுதியில் செயல்படும் ஸ்ரீனிவாசா கார்ட் போர்டு கம்பெனி அருகே உள்ள வேப்பமரத்தில் அன்று இரவு 7 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலை 6 மணிக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுபாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக மதுமிதாவுக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மதுமிதா தனது கணவன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுபாஷின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story