வாகனம் மோதியதில் தகராறு-வாலிபரை தாக்கி செயின் பறிப்பு

வாகனம் மோதியதில் தகராறு-வாலிபரை தாக்கி செயின் பறிப்பு

காவல் நிலையம் 

கோவை அருகே வாகனம் மோதியதில் ஏற்பட்ட தகராறின் போது வாலிபரை தாக்கி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ரகுவரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று தன்னோடு பணியாற்றும் கோபாலன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அத்திபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ரகுவரன் ஓட்டிவந்த வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.இதனையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின்னால் வாகனத்தை ஓட்டிவந்த நபர்கள் அலைபேசியில் மூலம் யாரையோ அழைத்த இருவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

அப்போது நான்கு பேரும் சேர்ந்து ரகுவரனை தாக்கியதுடன் அவரை மிரட்டி அணிந்திருந்த தங்க சங்கலியை பறித்து சென்றனர்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story