மதுபோதையில் தகராறு; இளைஞர் கைது

மதுபோதையில் தகராறு; இளைஞர் கைது

பைல் படம்

கோவை:வடவள்ளி பொங்காளியம்மன் வீதி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(19).காந்திபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர் அதற்கான தொகையை உணவுக் கூட ஊழியர் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என கூறி கிரெடிட் கார்டை கொடுத்துள்ளார்.கிரெடிட் கார்டு வசதி இல்லை என கூறிய ஊழியர் பணமாக கொடுக்க கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மதுபானக்கடை உணவக ஊழியரை தாக்கியுள்ளார்.மதுபோதையில் தன்னை தாக்கியதாக ஊழியர் அவினாஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் போலீசார் சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

Tags

Next Story