சாலை ஓரமாக நின்றவரிடம் தகராறு - அரிவாள் வெட்டு

சாலை ஓரமாக நின்றவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிவிட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தீயனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் வழிவிடு முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது சிவகங்கை சேர்ந்த ஆனந்த், கல்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம், மதுரை சேர்ந்த அசோக் உட்பட சிலர் காரில் அவரை முட்டுவது போல் வந்துள்ளனர்.

இதனால் பாலமுருகன் அவர்களை சத்தமிட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் பாலமுருகனை அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருகின்றனர். மானாமதுரை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பூபதிராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story