கணவருடன் தகராறு - மனைவி தூக்கிட்டு தற்கொலை.

கணவருடன் தகராறு - மனைவி  தூக்கிட்டு தற்கொலை.

தற்கொலை 

திருவள்ளூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவர் லாரியில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் தற்போது இவர் இரண்டாவது மனைவி நளினி (வயது 36) யுடன் வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று தமிழரசுக்கும் நளினிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்து தமிழரசு வெளியே சென்று பின்னர் வீடு திரும்பியபோது நளினி அவரது துப்பட்டாவில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் தொங்கியபடி இருந்த நளினியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நளினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மப்பேடு போலீசார் விரைந்து வந்து நளினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story