வாக்கி டாக்கியை பறித்து போலீசாரிடம் வாக்குவாதம்: விசிக பிரமுகர் கைது!

வாக்கி டாக்கியை பறித்து போலீசாரிடம் வாக்குவாதம்: விசிக பிரமுகர் கைது!

அவிநாசியில் வாக்கி டாக்கியை பறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அவினாசி போலீஸ் கைது செய்தனர்.


அவிநாசியில் வாக்கி டாக்கியை பறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அவினாசி போலீஸ் கைது செய்தனர்.

அவிநாசியில் வாக்கிடாக்கியை பறித்து போலீசாரிடம் வாக்குவாதம் விடுதலைக் கட்சி பிரமுகர் கைது! அவிநாசி எம். எஸ் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 53).விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி பொறுப்பாளராக உள்ளார். இவர் அவிநாசி கமிட்டியார் காலனியை சேர்ந்த தர்மராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு கடந்த ஒரு மாதங முன் வாடகைக்கு குடி வந்தார்.

இந்நிலையில் தியாகராஜன் அப்பகுதியில் தொடர்ந்து மதுபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டி கேட்ட வீட்டு உரிமையாளர் தர்மராஜிடம் தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த அவிநாசி போலிசார் விசாரணைக்காக அங்கு வந்தனர். அப்பொழுது தியாகராஜன் போலீசாரின் வாக்கிடாக்கியை பிடுங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தை பேசியுள்ளார். இதுகுறித்து அவிநாசி போலிசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்...

Tags

Next Story