பாவூா்சத்திரத்தில் அரிமா சங்கக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் அரிமா சங்கக் கூட்டம்

அரிமா சங்க கூட்டம் 

பாவூா்சத்திரத்தில் அரிமா சங்கக் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரத்தில், சென்ட்ரல் அரிமா சங்க வட்டாரக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் லட்சுமி சேகா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி அருணாச்சலம் தொகுப்புரையாற்றினாா். வட்டாரத் தலைவா் கே.ஆா்.பி. இளங்கோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிப் பேசினாா். ஆலங்குளம் அரிமா சங்க மண்டலத் தலைவா் ஜான்ரவி சிறப்புரையாற்றினாா். பாவூா்சத்திரம் சென்ட்ரல், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பேஷன் அரிமா சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். சங்கங்களின் செயலா்கள் அறிக்கைகளை சமா்ப்பித்தனா். சங்கத் தலைவா்கள் அடுத்த 3 மாதங்களின் செயல் திட்டங்களைத் தொகுத்து வழங்கினா். சென்ட்ரல் அரிமா சங்கச் செயலா் சசி. ஞானசேகரன் வரவேற்றாா். பொருளாளா் டாக்டா் கே.எஸ். சினேகா பாரதி நன்றி கூறினாா்.

Tags

Next Story