ஏம்பல் கோயில் கும்பாபிஷேகம்

ஏம்பல் கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

அரிமளம் அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருமயம் அரிமளம் ஒன்றியம் ஏம்பல் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று தொடங்கியது. அதனை தொடர்ந்து அனுக்ஞை, கணபதி ஹோமம், தன பூஜை, லட்சுமி பூஜை, கலச பூஜை மற்றும் யாக கால பூஜைகள் நடந்தன.

இன்று காலை 9.15 மணிக்கு யாககால பூஜை நிறைவடைந்ததும் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற் றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏம்பல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 8 கிராம நாட்டார், நகரத்தார், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story