கிராம சபை கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கிராம சபை கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கிராமசபை கூட்டம்

அரியலூர் மாவட்டம், மணகெதி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.
குடியரசு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், மணகெதி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கபட்டது. மேலும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கையினை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story