அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.கண்ணன்

அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.கண்ணன்
அரியலூர் வளர்ச்சி திட்ட பணிகள்
தா.பழூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ.கண்ணன் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் தா.பழூர் ஊராட்சிக்குட்பட்ட தாதம்பேட்டை காலணி தெருவில் ரூ.9.14 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தா.பழூர் காலணி தெருவில் ரூ.3.70 லட்சம் மதிப்பீட்டிலும், தா.பழூர் தெற்கு தெருவில் ரூ.4.31 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்கால் அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதேபோல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். இதில் அரசுதுறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story