ஆற்காடு: கட்டட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை!

ஆற்காடு:  கட்டட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை!
பைல் படம்
செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி தூக்கிட தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி விஷ்வா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஷ்வாவிற்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் படுக்கை அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story