ஆயுதப்படை காவலர் தற்கொலை
தற்கொலை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையத்தில் தமிழரசன்,வயது (35) ஆயுதப்படை பிரிவில் காவலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தமிழரசன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாராபுரம் காவல் நிலைய போலீசார் குடும்பப் பிரச்சினையா அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story