மதுராந்தகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராணுவ அணிவகுப்பு

மதுராந்தகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராணுவ அணிவகுப்பு

 ராணுவ அணிவகுப்பு

மதுராந்தகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் பஜார் முக்கிய வீதியில் தொடங்கி மதுராந்தகம், வன்னியர் பேட்டை, காந்திநகர், மருத்துவமனை சாலை ஆகிய காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க லாம் என்பதை வலியுறுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். இந்த போலீஸ் அணிவகுப்பிற்கு மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி தலைமை தாங்கினார். உடன் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் குழுவினர் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story