ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் - மாணவர்களுக்கு அழைப்பு

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் -  மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட ஆட்சியர் பழனி 

கடலூரில் நடக்கும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி கேட்டுக்கொண்டார்.
இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்த பேரணி நிகழ்ச்சி, சென்னை ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தால் நாளை (வியாழக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு பணிகளுக்காக நடைபெற உள்ளது. இப்பணிகள் குறித்தும் ராணுவ ஆள்சேர்ப்புக்காக கொண்டு வர கூடிய சான்றிதழ் குறித்தும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எனவே இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அதிகளவிலான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04146- 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story