கஞ்சா வழக்கில் கைது : 2 பேர் வங்கி கணக்குகள் முடக்கம்

கஞ்சா வழக்கில் கைது : 2 பேர் வங்கி கணக்குகள் முடக்கம்

பைல் படம் 

நாகர்கோவிலில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தந்தை உட்பட இருவரின் வங்கி கணக்கை முடக்கி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிதம்பரநாதன் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினித் (23). இவர் மரம் லோடு ஏற்றும் தொழில் செய்து வருகிறார். வல்லன்குமாரவிளை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் அஜய் (22) பி இ மெக்கானிக்கல் இரண்டாவது ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் பகுதியில் நின்ற போது போலீசார் சந்தேகத்தின் பெயரில் சோதனை நடத்தினர்.

அப்போது போலீசாரை அசிங்கமாக பேசி அரசு வேலை செய்யவிடாமல் தடுத்து, அங்கிருந்து அவர்கள் பைக்கில் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.பின்னர் போலீசாரையும் பைக்கால் மோதி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேல் நடவடிக்கை எடுத்த போலீசார் வினீத்தின் தந்தை வங்கி கணக்கு உட்பட இரண்டு பேரின் வங்கி கணக்குகளை முடக்கி, பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story