பட்டாசு வெடித்ததை தட்டி கேட்டதால் தகராறு: 3பேர் கைது

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதாபி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகண்ணன் வயது 54. இவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இவரது பங்கு முன்பு, கரூர் மாவட்டம் மைலம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ரியாஸ் அலி வயது 36, ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்த சந்தானகுமார், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் பிரசாத் மற்றும் நவநீதகிருஷ்ணன் என்கிற நந்தகோபால் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து பட்டாசை வெடித்துள்ளனர்.

இதனை பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜகண்ணன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த நான்கு பேரும், ராஜகண்ணனை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி இரும்பு ராடை காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜகண்ணன் வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரியாஸ்அலி, சந்தானகுமார், ராகுல் பிரசாத் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். நவநீதகிருஷ்ணன் என்கிற நந்தகோபால் தப்பி ஓடி தலைமறை வாகிவிட்டார். கைது செய்த மூன்று பேர் மீதும் நவம்பர் 17ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story