கடன் வாங்குவதில் தகராறு -பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது

கடன் வாங்குவதில் தகராறு -பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் கைது

கைது 

குரும்பூா் அருகே சேதுக்குவாய்த்தான், முஸ்லி­ம் மேலத் தெருவைச் சோ்ந்த சந்திரன் மனைவி கமலி­ (38). இவருக்கும், பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த சேதுபதி மனைவி சுமதிக்கும் இடையே மகளிா் குழு லோன் வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாம். இதனால், சுமதியைப் பாா்க்கும்போது அவரது மனம் நோகும்படி கமலி செயல்படுவாராம். இதுகுறித்து சுமதி தனது மகன் ரமேஷ் அரவிந்திடம் (25) தெரிவித்தாா். இதனிடையே, கடந்த 26ஆம் தேதி சேதுசுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் அருகே ­பைக்கில் சென்ற கமலியை ரமேஷ் அரவிந்த் வழிமறித்து, அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினாராம்.புகாரின் பேரி குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவந்தனா். இந்நிலையில், ராஜபதி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரை நேற்று போலீஸாா் கைது செய்து, திருச்செந்தூா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story