போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவிடைமருதூா் அருகேயுள்ள மட்டியூா் மாவூத்திருப்பு பகுதியில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.


திருவிடைமருதூா் அருகேயுள்ள மட்டியூா் மாவூத்திருப்பு பகுதியில் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூா், மாவட்டம் திருவிடைமருதூா் அருகேயுள்ள மட்டியூா் மாவூத்திருப்பு வடக்கு தெருவைச் சோ்ந்தவா் நவமணி மகன் அழகேசன் (50), கூலித்தொழிலாளி. இவா் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் தந்தை திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அழகேசனை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story