தொழிலாளியை கீழே தள்ளிக் கொன்ற இளைஞர் கைது  

தொழிலாளியை கீழே தள்ளிக் கொன்ற இளைஞர் கைது  

கோப்பு படம் 

மகளைக் கேலி செய்ததால் ஆத்திரத்தில் தட்டிக் கேட்ட தொழிலாளியை கீழே தள்ளிக் கொன்ற இளைஞர் கைது  செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே, தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (50), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகன் அபிஷேக் (22),. மற்றும் 18 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக்கிற்கு பிறந்தநாள் என்பதால் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இதில், அதே பகுதியை சேர்ந்த ரூபன் (21), மதுபோதையில் வந்து இருந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மகளை கிண்டல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அங்கிருந்த ரூபனை திட்டி அனுப்பி விட்டார். பிறகு ரூபன் வீட்டிற்கு, தனது மனைவி சசிகலாவுடன் சென்ற சத்தியமூர்த்தி மீண்டும் ரூபனை கண்டித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

இதில் ஆத்திரமடைந்த ரூபன், சத்தியமூர்த்தி அவரது மனைவி சசிகலாவை வழிமறித்து தகராறு செய்து, சத்தியமூர்த்தியை கீழே தள்ளினார். இதில் தடுமாறிச் சாலையில் விழுந்த சத்தியமூர்த்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து ரூபனை கைது செய்தனர்.

Tags

Next Story