சாராயம் விற்ற 2 பேர் கைது!

சாராயம் விற்ற 2 பேர் கைது!

பைல் படம் 

தச்சம்பட்டு அருகே சாராயம் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூஞ்சிராம் பட்டு பகுதியை சேர்ந்த குமார் (வயது 43) என்பவரையும் ,பரமேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story