நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது

நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி கைது

காவல் நிலையம் 

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகோபு மகன் எபிநேசன், 33; இவர், குடிபோதையில் கோர்ட் வளாகத்தில் நின்று கொண்டு சத்தமாக திட்டிக் கொண்டிருந்தார். கோர்ட்டில் பணிபுரியும் எழுத்தர் சேவியர்ராஜ், 44; குடிபோதையில் கோர்ட்டுக்குள் வரக்கூடாது என தடுத்து வெளியேற்றினார். இதனால், ஆத்திரமடைந்த எபிநேசன், சேவியர்ராஜை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தார். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து எபிநேசனை கைது செய்தனர்.

Tags

Next Story