முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர்  கைது

முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

கரடிசித்துார் கிராமத்தில் முன்விரோதத்தால் முதியவரை தாக்கிய இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் அண்ணாமலை, 68; அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகன் ஆறுமுகம், 33; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆறுமுகம் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் சேர்ந்து தாக்கியதில் அண்ணாமலை காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கவுரி, சுப்புராயன் உட்பட 3 பேர் மீது கச்சிராயபாளையம் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Tags

Next Story