இளம் பெண்ணை அவதூறாக பேசியவா் கைது

இளம் பெண்ணை அவதூறாக பேசியவா் கைது

கைது

கழுகுமலையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணை அவதூறாகப் பேசியவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணை அவதூறாகப் பேசியவரை போலீசார் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை தியாகி வெங்கடாசலம் தெருவை சோ்ந்த தங்கவேல் மகன் கூலித்தொழிலாளி முத்து (50). அதே பகுதியைச் சோ்ந்த வீட்டிற்குள் நுழைந்து, இளம்பெண்ணை அவதூறாக பேசினாராம். இதுகுறித்த புகாரிபேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து முத்துவை புதன்கிழமை கைது செய்தனா்.

Tags

Next Story