ஆண்டிபட்டி அருகே வீட்டின் முன்பாக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த நபர் கைது

ஆண்டிபட்டி அருகே வீட்டின் முன்பாக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த நபரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
ஆண்டிபட்டி அருகே வீட்டின் முன்பாக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ள டி.சுப்புலாபுரம் வடக்குதெரு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை பயிரிட்டு மூன்றடி உயரம் வரை வளர்த்து வந்துள்ளார். ஆண்டிபட்டி போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது வீட்டின் அருகிலேயே கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்த கஞ்சா செடியை அழித்து பறிமுதல் செய்த ஆண்டிப்பட்டி காவல்துறையினர் செல்லத்துறையை கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story