சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் திரி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் திரி வைத்திருந்தவர் கைது
காவல் நிலையம்
விருதுநகர் அருகே பட்டாசு தயாரிக்கும் திரியை சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்து திரிகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் விஜய பாண்டியன். இவர் கடந்த 18ஆம் தேதி காலை 11 மணியளவில் கிராம உதவியாளர் உடன் கவுண்டம்பட்டி கட்டபொம்மன் காலனி அலுவலகம் வந்த பொழுது அங்கு தகர செட்டில் எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளான மிஷின் திரி 200 எண்ணிக்கைகள் கொண்ட இரண்டு கட்டுகள் அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக சுய லாபத்திற்காக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் விஜயபாண்டியன் ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அங்கு வந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் மிஷின் திரியை வைத்திருந்த கவுண்டம்பட்டியைச் சார்ந்த அய்யனார் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story