சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பைல் படம் 

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தவரை கைது செய்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது தமிழக அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் ஜோலார்பேட்டை அருகே மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (வயது 28) இவர் சந்தைக்கோடியூர் பகுதியில் தமிழக அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் திருமூர்த்தி கைது செய்து மூன்று மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story