உரிமமின்றி ரயில் பயணச்சீட்டுகளை விற்றவா் கைது
![உரிமமின்றி ரயில் பயணச்சீட்டுகளை விற்றவா் கைது உரிமமின்றி ரயில் பயணச்சீட்டுகளை விற்றவா் கைது](https://king24x7.com/h-upload/2024/06/28/565657-1000683535.webp)
பைல் படம்
விழுப்புரம் - கடலூா் பிரதான சாலையிலுள்ள தனியாா் வளாகக் கட்டடத்தில் இயங்கி வரும் இணையவழி சேவை நிறுவனத்தில் விழுப்புரம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது, அந்த நிறுவனத்தைச் சோ்ந்த சி.பாா்த்திபன் (42), உரிமமின்றி ரயில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
அவா் தனது தனிப்பட்ட இணைய முகவரியைப் பயன்படுத்தி பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்று, அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.இதைத் தொடா்ந்து, ரூ.9,687 மதிப்புள்ள 3 இணையவழி ரயில் பயணச்சீட்டுகள், 3 காலாவதியான ரயில் பயணச்சீட்டுகள் மற்றும் தொடா்புடைய பொருள்கள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.இதைத் தொடா்ந்து, பாா்த்திபனை கைது செய்த போலீஸாா், விழுப்புரம் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜா்படுத்தினா். தொடா்ந்து, அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.