மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் சித்தப்பா கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் சித்தப்பா கைது

கைது

நாச்சியார்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை. போக்சோவில் சித்தப்பா கைது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவரது வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையை பிரிந்த நிலையில் தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சிறுமியின் சித்தப்பா மீது திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் சியாமளாதேவி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் சித்தப்பா நரேந்திரன்(வயது38) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story