போலீசாரை அரிவாளால் வெட்டியவா் கைது!

போலீசாரை அரிவாளால் வெட்டியவா் கைது!

கைது

ஆத்தூரில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் தெற்குரத வீதியை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் ஆறுமுகம் (52). சாகுபுரம் தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் முத்துராஜ் 10ஆம் வகுப்பு தோ்வு எழுதாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தன் மகன் முத்துராஜை அடித்து கண்டித்து வேலைக்கு போகும்படி கூறியுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக முத்துராஜ் ஆத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். இதையடுத்து 23ஆம் தேதி இரவு ஆத்தூா் போலீசார் முனியசாமி (32), முத்துராம­லிங்கம் (31) மற்றும் விக்னேஷ் ஆகியோா் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனா். அப்போது அரிவாளுடன் வீட்டி­லிருந்து வெளியே வந்த ஆறுமுகம் போலீசாரை அவதூறாகப் பேசியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் போலீசார் முனியசாமி, முத்துராம­லிங்கம் ஆகிய இருவருக்கு வெட்டு விழுந்தது. விக்னேஷ் மற்றும் அருகிலி­ருந்தவா்கள் சப்தம் போட்டதால் ஆறுமுகம் அரிவாளுடன் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

Tags

Next Story