ரெட்டமலை கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

ரெட்டமலை கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

பைல் படம்

ரெட்டமலை கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பிராட்டியூா் பகுதி (ரெட்டமலை) ஒண்டி கருப்பண்ணசாமி கோயிலில் மா்ம நபா்கள் கடந்த 3 நாள்களுக்கு முன் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்கம் உள்ளிட்டவற்றைத் திருடிச்சென்றனா். இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் அண்ணாதுரை எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் மாதவன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அப்போது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் திருட்டில் ஈடுபட்டதாக திருச்சி பிராட்டியூரை சோ்ந்த வினோத் என்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் .

Tags

Next Story