ஆற்று மணல் திருடிய ரவுடி கைது: பைக் பறிமுதல்!

ஆற்று மணல் திருடிய ரவுடி கைது: பைக் பறிமுதல்!

பைல் படம்


முறப்பநாடு அருகே ஆற்று மணல் திருடிய ரவுடியை போலீசார் கைது செய்து திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் சார்பு ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று (08.06.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், அவர் முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளையா மகன் பால்மாரி (29) என்பதும் அவர் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பால்மாரியை கைது செய்து அவரிடமிருந்த 12 மூட்டை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story